பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பஞ்ச தந்திரக் கதைகள்


'போடி, போ! பெண் புத்தி என்பது சரியாக இருக்கிறது. நாம் இன்னார் என்று நினைத்துப் பார்க்காமல் அந்தக் கடல் நம் முட்டைகளை எடுத்துக் கொண்டு போனால், அது படும்பாடு நாயும் படாது!’ என்று அந்த ஆண் சிட்டுக்குருவி வீராப்புப் பேசியது.

'என்ன புத்தியோடு இப்படிப் பேசுகிறாய்? வாயடக்கமில்லாத ஆமை இறந்த கதை உனக்குத் தெரியாதா? அந்த ஆமையின் கதையும் மூன்று மீன்

களுடைய கதையும் தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்! என்று பெண் சிட்டுக் கூறி அந்தக் கதைகளையும் விளக்கமாகச் சொல்லியது.

'அது கிடக்கட்டும், நமக்குள்ள இடம் இதுதான்! இங்கேதானே நீ உன் முட்டைகளை யிடு' என்று கட்டாயமாகக் கூறியது ஆண் சிட்டு.