பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று மீன்கள்

57


ஆமையும் சரியென்று அந்தக் குச்சியை வாயினால் பற்றிக் கொண்டது. அன்னங்கள் இரண்டும், இரண்டு பக்கமும் குச்சியைக் கவ்விக் கொண்டு பறந்தன. வானத்தில் ஆமை பறக்கும் புதுமையைக் கண்ட அந்த ஊரில் இருந்தவர்கள், வியப்புத் தாங்

காமல் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள். இதைக் கண்ட அந்த ஆமை,' எதற்காகச் சிரிக்கிறீர்கள்!’ என்று அவர்களைக் கேட்பதற்காகத் தன் வாயைத் திறந்தது. உடனே அது பிடி நழுவித் தரையில் விழுந்து இறந்து போய்விட்டது. 

12. மூன்று மீன்கள்

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன.அவற்றின் பெயர் வருமுன்காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின்காப்போன் என்பனவாகும்.

ப-4