பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பஞ்ச தந்திரக் கதைகள்

சொல்லியது. உடனே எல்லாப் புறாக்களும் இறங்கித்தீனி தின்னப் போய் வலையில் மாட்டிக் கொண்டன.

இதைக் கண்ட அந்த அரசப்புறா எல்லாப்புறாக்களும் சிக்கிச் சாகும்போது, தான் மட்டும் உயிர் பிழைத்திருப்பது தக்கதல்ல என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, தானும் வலையில் போய் வீழ்ந்து அகப்பட்டுக் கொண்டது.

அப்போது அதன் மனத்தில் ஓர் அருமையான எண்ணம் தோன்றியது.

'வேடனிடம் அகப்படாமல் தப்ப வேண்டுமானால், எல்லோரும் இந்த வலையைத் துக்கிக் கொண்டு ஒன்றாகப் பறப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று அரசப்புறா மற்ற புறாக்களைப் பார்த்துக் கூறியது.