பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பஞ்ச தந்திரக் கதைகள்

“அந்த எலி குதித்தோடியதைப் பார்த்துத் தான்யோசனையில் ஆழ்ந்து விட்டேன். நான் தெருத் தெருவாகச் சுற்றிப் பிச்சை யெடுத்துக் கொண்டு வருகிற சோற்றை யெல்லாம் இது இங்கிருந்து கொண்டே தின்று கொழுத்துப் போய்விட்டது. எவ்வளவு வேகமாக அது குதித்துப் பாய்கிறது! அதைப் பிடிக்கக்கூட'முடியவில்லை. இப்படி மதமதப்பான அச்சமில்லாத எலியை நான்,[ பார்த்ததேயில்லை’ என்று சைவத்துறவி கூறினான்.

‘இந்த எலி ஒன்றுதானா, இங்கு இன்னும் வேறு எலிகள் இருக்கின்றனவா?’ என்று வந்திருந்த சந்நியாசி கேட்டான்.

‘ஒன்றுதான்’ என்று சொன்னான் சைவத்துறவி.

“அப்படியானால், உன் சோற்றுப் பருக்கையினால் மட்டும் இது கொழுக்கவில்லை. இது கொழுத் திருப்பதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்த இடத்திலே நாம் மண்வெட்டியால் வெட்டிப் பார்க்க வேண்டும்’ என்றான்.

“ஏன்?” என்று சைவத்துறவி விவரம் புரியாமல் கேட்டான்.

“எவனிடத்தில் பொருள் இருக்கிறதோ, அவன் கொழுப்பாக இருக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல, இந்த எலி இருக்குமிடத்தில் ஏதோ புதையல் இருக்க வேண்டும்’ என்று வந்திருந்த சந்நியாசி கூறினான்.