பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புலியால் மாய்ந்த பார்ப்பனன்

95



முழுகிச் சுத்தமாக வந்து இந்தக் காப்பை வாங்கிக் கொண்டு போ!’ என்று கூறியது.

நல்லதென்று பார்ப்பனன் ஏரிக்குள் இறங்கினான். ஏரி ஒரே சேறும் சகதியுமாக இருந்தது.



சேற்றில் கால்கள் அழுந்திச் சிக்கிக் கொண்டான் பார்ப்பனன். என்ன செய்வதென்று தெரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட புலி,' ஆ! சேற்றில் சிக்கிக் கொண்டாயோ? இதோ நான் உன்னை வெளியில் எடுத்து விடுகிறேன்' என்று சொல்லி அவன் மீது பாய்ந்தது. தன் முன்னங்காலால் அவனை அறைந்து கொன்றது.