பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
113


1682-ஹேலியின் வாழ்க்கையில் ஒரு மைல் கல் எனலாம், அப்பொழுதுதான் அவர் வால்மீனைக் கண்டார். முதலில் அது அவரைப் பெரிதும் கவர வில்லை.

ஹேலிக்கு இந்த சமயத்தில் திருமணமாயிற்று. மனைவியின் பெயர் "மேரிடுக்" லண்டன் அருகில் 'ஐலிம்ட னில் ஹேலி இல்லற வாழ்க்கையை மேற் கொண்டார். அங்கு ஒரு வான் ஆராய்ச்சி மையத்தை அமைத்துக் கொண்டு, தினசரி குறித்த நேரத்தில் சந்திரனையும், நட்சத்திரங்களையும் ஆராய்ந்தார்,

1683-ல் இரு ஆராய்ச்சித் தாள்களை வெளி யிட்டார். ஒன்று சனிக்கிரகம் மற்றும் அதன் துணைக்கோள்கள் பற்றியது; மற்றொன்று பூமியைப் பற்றியது.

1684-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரிடினி கல்லூரியில் பணி புரியும் மேதை ஐசக் நியூட்டனை ஹேலி சந்தித் தார்,

இந்தச் சந்திப்பு அறிவியலின் அடிப்படைக்கு உதவ ஏதுவாயிற்று. அவர்களது நட்பு பல உண்மைகளை உணர வல்லதாக அமைந்தது.

1684-ம் ஆண்டு துவக்க மாதங்களில் ஜோகானிஸ் கெப்ளர் வெளியிட்ட, கோள்களின் விதி பற்றிப் படித்தறிந்தார். கெப்ளரின்மூன்றாம்

பஞ்ச-8