பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருப்பதாக அறிவித்தார்.

ஹேலி பூமியின் வயதையும் அறிந்தார். கடல் நீரின் உப்பின் தன்மையை, ஒரு கடிகாரம் தனது பணியைத் துவக்கியதற்கு ஒப்பிட்டு ஆராய்ந்தார்.

இதன் மூலமாக பூமியின் உண்மையான வயதை அறிய முடியாவிட்டாலும், அதற்கு மிக நெருக்கமாகச் செல்ல முடிந்தது.

தமது 39வது வயதில் மீண்டும் வால்மீன்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹேலி துவக்கினார். அவரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. எனவே, 1637 முதல் 1698வரை வானில் தென்பட்ட 23 வால்மீன்களை ஆராய்ந்தார். அவற்றின் வேறுபட்ட கோணங்கள் புலப்பட்டாலும் 1521, 1607, 1682, இவற்றில் தோன்றிய வால்மீன்கள் ஒத்த குணமுடையவையாகக் காணப்பட்டன.

எனவே, ஒரு வால்மீன் குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் தென்படுவதாக அவர் அறிந்தார். அவர் இதே வால்மீன் 1758-ல் தோன்றுமென அறிவித்தார்.

வானியல் வல்லுனர்கள் ஆச்சரியப்படும் வகையில், வால்மீன் மீண்டும் 1759-ல் தோன்றியது.