பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

எல்லாம் தேவகுமாரர்களா?” என்று வியப்புடன் கேட்டனர்.

"ஆமாம்," என்று தலையசைத்தனர் ஐவரும்.

உடனே அழகப்பன் மிகவும் தயங்கியபடி. அவர்களை நோக்கி, “புதிதாக எங்களுடன் உறவு கொள்ள ஆசைப்பட்டு வந்துள்ள என் இனிய நண்பர்களே; நான் கூறப் போவதைக் கேட்டு கோபப்படவோ; எங்களைப் பற்றித் தவறாக எண்ணவோ கூடாது. அதற்கு உறுதி கூறினால், என் மனதிலுள்ள ஒரு சந்தேகத்தைக் கூறுவேன்” என்றான்.

உடனே அந்த ஐவரும் ஒருமித்த குரலில், "நண்பனே, உன் மனதிலுள்ள சந்தேகம் எது வானாலும் தாராளமாய்க் கேட்கலாம்; அவற்றிற்கு விடை கூற நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்" என்றனர்.

உடனே அழகப்பன் தயங்காமல், உங்களை நாங்கள் எப்படி நம்புவது?" என்று கேட்டான்.

உடனே உலக நாதன், “எங்கள் கழுத்திலிருக்கும் மாலைகள் வாடாதிருப்பதால்; கொட்டுகிற இந்த மழை நீர் எங்களைத் தீண்டாதிருப்பதால்; எங்கள் இமைகள் இணையாமல் இருப்பதி