பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77


உணர்ச்சியின் உச்ச கட்டத்தில் கிரிக்கெட் காமெண்டரி கேட்டுக்கொண்டிருந்த அழகப்பனின் செவிகளில், வாசலிலிருந்து பலமுறை கூப்பிட்ட கந்தசாமியின் குரல் கேட்கவே இல்லை.

அழகப்பன் இருக்கிறானா இல்லையா என்று அறிந்து கொள்ள உள்ளே வந்த கந்தசாமி தோள் களைத் தொட்டு, “மண்டபத்திற்கு வரல்லியா அழகப்பா?" என்று கேட்டபோதுதான் அவனுக்கு சுய உணர்வு வந்தது.

உற்சாகத்தின் விளிம்பில் இருந்த அழகப்பன் கந்தசாமியை அருகில் அமரச் செய்து “இன்னும் ஐந்து நிமிஷத்தில் இந்தியா ஜெயித்து ஆட்டம் முடிந்துவிடும்; சேர்ந்து போகலாம்” என்று பதில் கூறிவிட்டு காமெண்ட்ரியில் புகுந்து விட்டான்.

கந்தசாமிக்குக் கிரிக்கெட்டைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும்; அழகப்பனோடு சேர்ந்து போகலாம் என்கிற ஆசையில் உட்கார்ந்திருந்தான். ஆனால் ஆட்டம் முடிந்து ரேடியோவை நிறுத்திய, அழகப்பன் மிகுந்த வருத்தத்துடன், "கந்தசாமி நான் இன்னிக்கு மண்டபத்துக்கு வரல்லே; நீ மட்டும் போயிட்டு வா. எனக்கு மனசு சரியாயில்லை" என்று சொல்லவுமே, ஒன்றும் புரியாத கந்தசாமி, “ஏன் அழகப்பா! திடீர்னு வரல்லேங்கறே? கொஞ்சமுன்னே வரேன்னு