பக்கம்:படித்தவள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 Uाéf “விவாகரத்துக்கு அவர் முன் அறிவிப்புத் தந்திருக்கிறார்” என்றாள். எனக்கு நிலை கொள்ளவில்லை. நேரே கந்தசாமியின் கடைக்குச் சென்றேன். அங்கே மாலி குறிப்பிட்ட எழுத்தாசிரியை அந்தக் கடையில் தக்கதோர் ஆசனம் அதில் வீற்றுக்கொண்டு தான் எழுதும் கதையை விமர்சித்துப் பேசிக்கொண்டு இருந்தாள். அவள் புனைபெயர் பூலன்தேவி என்று தெரிந்தது. கந்தசாமி பூலன் தேவியை அறிமுகம் செய்தான். "இவர்கள் சிறந்த சமூக எழுத்தாளர்" என்றான். "குடும்ப எழுத்தாளர் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன்; இது புதிதாக இருக்கிறதே" என்றேன். "இன்று எழுத்தாளர்கள் மாறி வருகிறார்கள்: புதிய பிரக்ஞையோடு எழுதுகிறார்கள். புதிய பிரச்சனைகளைத் தம் எழுத்தில் சந்திக்கிறார்கள். இவர்கள் பூலன்தேவி என்ற புனைபெயரில் எழுதுகிறார்கள்" என்றான். "இந்தப் பெயர்" என்று ஆரம்பித்தேன். "புரட்சி; என் எழுத்தில் புரட்சியை உண்டாக்கு கிறேன்" என்றாள். "உங்களை மாலி மணக்கப் போகிறான் என்று கேள்விப்பட்டேனே" என்றேன். அவளுக்கு அது அதிர்ச்சியைத் தரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/174&oldid=802490" இலிருந்து மீள்விக்கப்பட்டது