பக்கம்:படித்தவள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 एाrd அவள் பழைய காதலன் கடிதங்கள் எழுதலாம்; பித்தம் பிடித்து அலையலாம்; அதைப் பொருட்படுத்தக் கூடாது. மணவாழ்வு என்று அவள் துணிந்து ஏற்றுக் கொண்ட பிறகு அவள் பாதை விலகவில்லை; அவளைத் துறப்பது: இழப்பது மடைமை; முதலில் அவளை டெல்லி போகாமல் நிறுத்துங்கள்" என்றாள். பூலன்தேவி என்னை மிகவும் கவர்ந்து விட்டாள்; அவள் தெளிந்த அறிவு, புரட்சி உள்ளம் புதிய சிந்தனைகளைத் தருகின்றன. so/63)ón! நாட்டுக்குப் பயன்தருவன என்று மதிப்பீடு செய்தேன். "மனைநலம் என்பது தவறுகளைப் பற்றிப் பேசுவது விமர்சிப்பது அன்று: நேசமும் பாசமும் வளர்த்து வாழ்க்கையை அழகுபடுத்த வேண்டும் என்று அவள் கூறிய அறிவுரை என்னை மிகவும் கவர்ந்தது. நிச்சயம் கந்தசாமி அவள் எழுத்துக்களை அச்சிட்டு நூலாக்கினால் நன்கு பயன் அடைவான். "பூலன்தேவி வாழ்க என்று வாழ்த்தினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/178&oldid=802494" இலிருந்து மீள்விக்கப்பட்டது