படித்தவள்
65
“ரமண மகரிஷி”
“கான்சர்.”
“விவேகானந்தர்?”
“அவரும் அப்படித்தான் என்று கூறுகிறார்கள்.”
“சிந்திக்கவேண்டியது” என்றேன்.
“சித்தர்கள் சிலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார்கள்” என்றார்.
“கி.பி. இரண்டாயிரம் வருகிறது; இரண்டாயிரம் ஆண்டுகள் மனிதன் சாதித்தவை பல; தனி மனிதன் அல்ல; மனிதன் அவர்கள் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்து சாதித்தது என்ன?”
“மரணத்தை வென்று இருக்கிறார்கள்.”
“வெல்லவில்லை; தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்கள்.”
“அதுவும் ஒரு சாதனை தானே.”
“அவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல; அவர் எவற்றைச் செய்தார்; செய்தவை யாவை? அதுதான் கணக்கு வரும்” என்றேன். “உங்களுக்கு இந்தக் குறள் தெரியுமா?”
“தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
“நாம் என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்தியுங்கள், செயல்படுங்கள்; எத்தனை நாள் வாழப் போகிறோம் என்று