பக்கம்:படித்தவள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ராசீ



“கானகம் செல்ல நான் சனகன் மகள் அல்ல; வானகம் சென்ற என் தந்தையின் நினைவில் வாழும் என் தாயை விட்டு நான் பிரியமுடியாது” என்று க்றினாள்.

“வேலுச்சாமி எப்படி இருக்கிறார்?”என்று கேட்டாள்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று அதை எடுத்துக் கொண்டேன்.

அவள் ஏன் என்றும் இல்லாமல் இன்று அவன் முகவரியைக் கேட்கிறாள்?

அடுத்த பயணத்துக்கு அவள் அடி வைக்கிறாளா? புரியவில்லை.

“ஏன் உங்களுக்கு மகள் இல்லையா?” என்று கேட்டாள்.

ஒரு மகளை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்றேன்.

“அது யார்?”

“வரப்போகும் மருமகள்.”

“அவள் உண்மையில் அதிருஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும்” என்றாள்.

“ஏன்? எப்படி?”

“உங்களை மாமனாராக அடைவதற்கு” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/82&oldid=1284283" இலிருந்து மீள்விக்கப்பட்டது