பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀


நீ சிரித்தாய்; ஆனால் ஒன்றும் பேசவில்லை. இதற்காகத்தான் நான் நீண்ட நாள் காத்துக் கொண்டிருந்தேன் என உணர்ந்தேன்.



நீரிலிருக்கும் மீன் மௌனமாக இருக்கிறது; நிலத்திலிருக்கும் விலங்கு ஒலி எழுப்புகிறது ; வானிலிருக்கும் பறவை பாடுகிறது.


கடலின் மௌனத்தையும். நிலத்தின் ஒலியையும், வானத்தின் இசையையும் மனிதன் தன்னுள்ளே கொண்டிருக்கிறான்.


܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

17