பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀


கரிய இரவே, காதலித்த மங்கையின் அழகை அவள் விளக்கை அணைத்த பிறகு உணர்வதுபோல நான் உனது அழகை உணர்கிறேன்.



மலரிலிருந்து தேனைக் குடித்த வண்டுகள் ரீங்காரம் செய்து தமது நன்றியை மலர்களுக்குத் தெரிவிக்கின்றன.

பலவித நிறங்களோடு பளபளக்கும் வண்ணத்துப் பூச்சிகள் மலர்கள் தாம் தங்களுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று திண்ணமாய் நம்புகின்றன.


܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀

25