இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
138 | பட்டி மண்டப வரலாறு
பட்டி வள்ளி
கைவளையல் ஏற்றிஇரு காலில் வளைத்தேற்றி மைவளையும் நெஞ்சமயலேற்றி - வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல் திருட்டு வியாபாரம் செய் செட்டி"8
என் று வள்ளியைப் பட்டியாகப் பாடினார் திருட்டு
வியாபாரம் செய்த முருகனைச் செட்டி என்றாலும்
அஃதும் பட்டி என்றே குறிப்பால் பொருள்படும்.
பட்டி - மக்கள்
காமவெறிக் குறும்பில் தேறிய ஒருவனை ஒரு
பரத்தையின் தாய்க் கிளவி
பட்டிமகன்
மோகினி மந்திரம் முழுதறிவான் ,29
என்று பகடி பேசியதை விறலிவிடுதூது கூறுகின்றது.
பட்டி மன்
திருஞானசம்பந்தர் சமணரை வாதில் வெல்ல
முன்வந்தபோது அவ்வாது பாண்டியன் திருமுன் நிகழ இருக்கும் நிலையில் பாண்டிய மன்னனை, -
பண்டிமன் தென்னவன் பாண்டியனுக்காகவே"