பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சங்கப் பாங்கும் சமயப் பங்கும்

அ. சங்கப் பாங்கு

கருத்தை நாட்டக் கொடி நாட்டல்

பூம்புகார் - சோழ நாட்டின் தலைநகர்.

அந்நகர்ப் பெருங் கடைத்தெரு ஆரவாரம் மிகுந்து காணப்படுகின்றது.

விழாக் கொடிகள்,

விளம்பரக் கொடிகள்,

மனைமங்கலக் கொடிகள்

எனப் பலவகைக் கொடிகள் வானளாவிப் பறக்கின்றன.

ஒரு கொடி,

அது பட்டுக் கொடி,

ஆளுயரக் கொடி அதனை ஊன்றிப் பிடித்தவாறு ஒரு தலைப்

பாகைக்காரர் நிற்கிறார்.

அனைவரும் அவரை விழித்துப் பார்க்கின்றனர், அப்பார்வையில் பணிவும் தென்படுகின்றன. அதனைக்