பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 279

நிகழ்த்துகின்றனர் . அண்மையில் திருவையாற்று அரசர் கல்லூரி மாணவர் தொண்டு புரிந்து நிறைவான மூன்று நாள் விழாக்களிலும் பட்டிமண்டபங்களும், வழக்காடு மன்றமும் நிகழ்த்தப்பட்டன.

விழாமேடையில் பட்டிமண்டபம்போன்றுபயணஞ் செய்யும் தொடர் வண்டியில் ஒன்றிரண்டு நிகழ்ந்தன. தரையில், ஊர்தியில் நிகழ்ந்தால் கடற்பயணத்தில் நிகழ வேண்டாமா? கப்பலில் நிகழ்ந்தது . வானவூர்தி இதனை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது எனலாம்.

விளைச்சல் மிகுதியானால் நலமாகும் அளவுக்கு மீறினால் பொருள் அங்காடியில் மலியும் . இந்த இயற்கை பட்டி மண்டபத்தையும் தழுவியது.

கருத்துக்குப் போர்தோன்றி மறைந்து, சமயப் பிணக்கிற்காக, அஃதும் அருகி, கவர்ச்சிக்கு ஆட்பட்ட பட்டி மண்டபம் மலிந்து போய்த் தன் தகுதியை இழக்கத் தொடங்கியுள்ளது.