பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 | பட்டி மண்டப வரலாறு

“உள்நின் றகன்ற உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்கல்”

என்றபடி உரையாசிரியர் கருத்துகளும் சான்றுகளாகக் கொண்டு கருத்துகள் விளக்கப்பட்டன.

எனவே, தமிழ் நூல்நெறி கொண்டு உலகியலின் மரபுகளையும், பிற கருத்துகளையும் துணைகளாகக் கொண்டது இவ்வாய்வு.

இவ்வாய்வால் காணப்பட்ட உண்மைகளின் பதிவுகளைத் தொகுத்துக் கூறுவது இன்றியமையாத நிறைவாகும்; ஆய்வின் பயனுமாகும். ஆய்வு கண்டுள்ளவை உண்மைக் களத்தில் நிற்பவை; சான்று உறுதிப்பாடு உடையவை; பல்வகைத் தமிழ்ச் செய்திகளை நிறைவாகக் கொண்டவை. எழுதியவர்க்கு மனநிறைவை வழங்கிக் கொண்டிருப்பவை. -