இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42 | பட்டி மண்டப வரலாறு
“நல்லவை, தீயவை, குறைநிறை அவையெனச் சொல்லுப என்ட தொல்லை ”
(தொன்மறச்சான்றோரே)
என்பதனைக் காட்டினார்.
தொடர்ந்து, இவ்வவைகளை விளக்கும் பழம்பாடல்களைக் காட்டினார்.
‘தகாதவற்றையும் வேண்டாதவற்றையும் நாய் போல் குரைத்துச் சொன்னவன் கருத்தையும் எடுத்துச் சொல்லி ஒருதலைச்சார்பாக இயங்குவது தீயவை எனப்பட்டது.
நிறைவில்லாத சொற்களை நினைத்தபடி எல்லாம்
சொல்லுதல் குறையவை என்று காட்டப் பட்டுள்ளது.
நிறையவை
‘நிறையவை என்பது நினையுங் காலை
எல்லாப் பொருளையும் தன்னகத்தடக்கி
எதிர்வரு மொழிகளை எடுத்துரைப்பதுவே”
என்னும் நிறையவை பற்றிய பாடலும் அத்தொடர்பில் உள்ளது. இதில் எதிர்வரு மொழிகள் என்றமை நாம் கொள்ளவேண்டிய குறிப்பாகும். இவ்வாறு காட்டப்பெற்ற அவை பற்றிய பாடல்கள் எந்த நூலில் உள்ளவை ()