56 T பட்டி மண்டப வரலாறு
-
இருந்தமைபோய் அதனையொட்டி பதினெண்கீ ழ்க் கணக்குக் காலத்திலேயே தீமை பயப்பதாகவும் உவக்கத் தக்க ஒன்றன்று என்பதாகவும் ஆயிற்று இதனை வாதி என்னும் சொல்லை அமைத்துஏலாதி,
- r’ + + . .41 “யார்திறத்தும் வாதுஉவவான்”
என்று ஒதுக்கத்தக்க ஒன்றாக வாதத்தைக் கூறியது . இவ் வொதுக்கல் தொடர்ந்தது.
இது நிற்க,
பட்டி மண்டபத்தில் மறுப்பும், மாறி மாறிப் பசுவதும் இன்றியமையாமல் இடம் பெற்றமை கொள்ள வேண்டியனவாகும்.
(7) கருத் துப்போர்க்குத் தகுதி கொள்ளல்
“எண்ணித் துணிக கருமம்” என்னும் வள்ளுவ அறிவுரை இங்குக் கருதத்தக்கது. ஒரு செயலில் இறங்கும் முன் அச்செயலில் எவை எவற்றை எதிர்கொள்ள நேரும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் அவற்றிற்கு ஏற்றபடி தன்னை அச்செயலுக்குத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். பட்டி மண்டபக் கருத்துப்போருக்கும் இஃது இன்றியமை யாதது.
அவையறிதல் என்ற அதிகாரத்தைத் திருவள்ளுவரும்
நாலடியாரும் முன்றுறையறையனாரும் அமைத்தனர். அவற்றுள் இத்தகுதிகள் நிறைவாக உள்ளன.