பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த வகையான இடஒதுக்கீடு தொடரத்தான் செய்தது.

இந்த ஜம்புதீவக் கண்டத்தில் சின்னஞ்சிறு குறுநில அரசு தொடங்கி, பேரரசுகளாய் விளங்கிய அரசுகள் வரையில் இதில் விதிவிலக் கில்லை, வாளைக்கொண்டு கொடிநாட்டிய மொகலாயர், சுல்தான்கள் முதல் நவீன கருத்துகளோடும், நவீன கருவிகளோடும் வந்த ஐரோப்பியர் ஆட்சிவரை தொடரத்தான் செய்தது.

ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கொள்கையில் முதலில் கலப்புகளை துழைத்தது. தம் படைப் பிரிவில் பறையர் ரெஜிமெண்ட் (விக்டோரியா ரெஜிமென்ட்) மகர் ரெஜிமென்ட், கூர்க்கா ரெஜிமென்ட். என பல ராணுவப் பிரிவுகளை அது வைத்திருந்தது இந்த பிரிவுகள் அப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப் பட்டதல்ல, மாறாக அவர்களது வீரத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தொடங்கப்பட்டவை. இந்த பிரிவுகளும் 1857 சாதி இந்து ராணுவ வீரர்களின் கலகத்திற்கு பிறகு கலைக்கப்பட்டது. ரெஜிமெண்ட் ராணுவ வீரர்களுடன் கலந்துறவாட சாதி இந்து ராணுவ வீரர்கள் மறுத்ததால் தொடங்கிய கலகம் 1858ல் தீண்டத்தகாதவர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதில்லை எனும் விக்டோரியா பேராணையோடு முடிவுக்கு வந்தது. இந்த பின்னடைவை டாக்டர். அம்பேத்கர் மற்றும் பண்டிதர் அவர்களைத் தவிர வேறு யாரும் வெளிப்படுத்தாதது ஒன்றும் யதேச்சையானதல்ல. எனினும் இழப்பு தொடரத்தான் செய்தது. தீண்டத்தகாதவரை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தவர்களில் அம்பேத்கரின் தந்தையும் ஒருவர் என பின்னாளில் அவர் நினைவுகூர்ந்தது இதனது தாக்கத்தை உணர்த்துகிறது. தமிழகத்தின் இந்த கோரிக்கையை முன் வைத்தவர் பண்டிதர்

அந்த புறக்கணிப்பை குறித்து மிகுந்த ஆதங்கத்தை பண்டிதர் வெளிப்படுத்தி. அந்த படைப்பிரிவுகளின் முக்கியத்துவத்தையும் எழுதினார்.

செகன்றாபாத்திலிருந்து ஓர் ஜெனரல் சாதிபேதமற்ற திராவிடர்களில் தக்க சுகதேகிகளாயிருப்பவர்களை பொறுக்கி எடுத்து ஆர்டில்லேரி உண்டு செய்யும்படி செய்தார், அவ்வகை ஆரம்பித்தவர் குதிரைகளையேறி சவாரி செய்யும் விஷயத்திலும பீரங்கிகளைத் திருப்பி மாற்றுவதற்கும், நிறுத்துவதற்கும், மருந்துகளை கெட்டித்து சுடுவதற்கும் உள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், யுக்தியையும், இராஜ விசுவாசத்தையும் ஆராய்ச்சி செய்தே ஆரம்பித்தார்.

கௌதம சன்னா / 12