உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 சொல்வாயாக! இரவலர்க்கு வரையாது கொள்க எனத்‌ தருவாயாக: நீ மறைந்த பின்னும்‌, நீ எய்திய புகழா னது, இவ்வுலகத்திலே, வெளிப்படையாகவே ெடுங்‌ காலம்‌ வரை நிலைத்து நிற்கும்‌!” 'வசையும்‌ நிற்கும்‌! இசையும்‌ நிற்கும்‌! அதனால்‌ வசைநீக்கி இசைவேண்டியும்‌ நசை வேண்டாது ஈன்று மொழிந்தும்‌ இரவலர்க்கு அருகாது கொள்‌ என விடுவையாயின்‌, வெள்ளென ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்‌. ஈண்டு நீடு விளங்கும்‌! நீ எய்திய புகழே! (புறம்‌ - 259) “சேரமான்‌ கணைக்கால்‌ இரும்பொறை : சேரமான்‌ கணைக்காலிரும்பொறை என்பான்‌ சசர மன்னன்‌ ஆவான்‌. அவன்‌ சோழன்‌ செங்கணான்‌ என்ற "சோழ அரசனோடு போர்‌ புரிந்தான்‌. சோழ மன்னன்‌ ம்பாரில்‌ வென்றான்‌. சேரமன்னன்‌ தோற்றுக்‌ கைது செய்யப்பட்டுச்‌ சிறையில்‌ அடைக்கப்பட்டான்‌. சிறை - யில்‌ கிடந்தபோது நா வறட்சியுற்று நீர்வேட்கை ஏற்‌ பட்டது. காவல்‌ காக்கும்‌ பணியாளரைப்‌ பார்த்துத்‌ ட தண்ணீர்‌ கேட்டான்‌. அந்தக்‌ காவல்காரன்‌ சேர மன்னனை ஒரு பொருட்டாகக்‌ கருதாமல்‌, தன்‌ விருப்பம்போல்‌ காலந்தாழ்த்தித்‌ தண்ணீர்‌ கொண்டு "வந்து கொடுத்தான்‌. , சேரமான்‌ அதனைக்‌ கையில்‌ வாங்கி வைத்துக்‌ “இகாண்டு, தன்‌ இழிந்த நிலையைப்‌ பற்றி எண்ணி