நம்பிக்கைகள் !
சங்கிலி யொக்கும் விதிகண்டீர்;-வெறுஞ்
சாத்திர மன்றிது சத்தியம்"
என்று கூறுவான்.
விதுரனின் அமைப்பை ஏற்று அத்தினபுரத்துக்குப் பயண மாதலைக் கூறும் பாரதி,
தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்
திருநகர்விட் டகல்கின்றான் தீயோர்ஊர்க்கே !
நீங்கிஅகன் றிடலாகும் தன்மை உண்டோ *
நெருங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?
என்று கூறுவான். காவியத்தின் இறுதியில் சபதச்சருக்கத்தில் திரெளபதி ஆடை குலைவுற்று நிற்கின்றாள் துச்சாதனனின் உலகம் கேட்டிராத செயலால், சீறி எழுந்த வீமனின் சிக்ை கதிர் எழும் பேச்சில்,
இது பொறுப்ப தில்லை-தம்பி
எளிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திருவோம்”
என்று கனல் தெறிக்கக் கூறுகின்றான். இதனைக் கேட். பார்த்தன்,
சினமான தீஅறிவைப் புகைத்த லாலே
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய் 'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்; 1. பாரதி பாஞகாலி சபதம் - 8ே, 138 12. மேற்படி 145 13. மேற்படி - 281