பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி.

81 - அகவையை எட்டும் இந்த நூலாசிரியர் எம்.ஏ., பி.எஸ்.சி., எல்.டி., வித்துவான், பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் தலைமை யாசிரியராகவும் (1941-50), பத்து ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் - பேராசிரியராகவும் (1960-77 பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1978ல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி - 1979 ஜூன்) தமிழ்க் கலைக் களஞ்சியம் தலைழைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். 1989 மே முதல் 1990 அக்டோபர் முடிய தமிழ்ப் பல்கலைக் கழகம் காஞ்சி தத்துவ மையத்தில் தகைஞராகப் பணியாற்றி 1200 பக்கத்தில் வைணவச் செல்வம் என்ற ஒரு பெரிய ஆய்வு நூலை உருவாக்கி

வெளியிட்டவர். 1996 பிப்ரவரி முதல் சென்னைப் பல்கலைக்கழக மரபு வழி பண்பாட்டு நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றுபவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி. பட்டம் பெற்றவர். பல எம்.ஃபில், பிஎச்.டி.

மாணவர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர்.

பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம், உளவியல் (5), இலக்கியம் (19), சமயம், தத்துவம் (31, திறனாய்வு (8). அறிவியல் (16, ஆராய்ச்சி (6) வாழ்க்கை வரலாறு, தன்-வரலாறு (14) என்று 109 நூல்களின் ஆசிரியர். இவர் தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசுகள் பெற்றுள்ளன. இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 'அருங்கலைக்கோன் என்ற விருதையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டி 'று சடகோபன் பொன்னடி என்ற விருதையும் (1987), தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழக அரசு திருவிக.' விருதையும் (1987), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதையும் (1991, இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை இவர்தம் கல்வி, இலக்கியம், அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி இராசாசர். முத்தைய வேள் விருதையும் (1994), சென்னைக் கம்பன் கழகம் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் விருதையும் (1994) வழங்கிச் சிறப்பித்தன. இனிமை எளிமை, தெளிவு இவர்தம் நூல்களின் தனிச்சிறப்பு களாகும்.

Printed by £angowah Printers, Madras-6000i4.