இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2O - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அடகுக் கடையிலிருந்து கணக்கப் பிள்ளை ஓடி வந்தார். ராமன் திரும்பிப் பார்த்து, மனம் பதை பதைக்க என்ன வென்று கேட்டான். "உன் மகன் குகனைப் பார்த்தேன் ராமா!' "கணக்கப்பிள்ளை என் மகன் இந்த ஊரிலேயே இல்லியே! அவன் பள்ளிக்கூடம் படிக்கிறான்னுதான் உனக்குத் தெரியுமே!’ காலையில பார்த்தேன். : அப்படியா! எனக்கே தெரியாதுப்பா! நான் வீட்டுக்குத்தான் போறேன். வந்தா நல்லதுதானே! அவனோட அம்மாவுக்கும் காய்ச்சல். பார்த்த மாதிரியும் இருக்கும். - ராமா! அதுல ஒரு விஷயம் கேளுப்பா! உன் பையன் குகன். நான் இருக்கிற அடகுக் கடைக்கு அவசர அவசரமாக ஓடிவந்தான். கையில ஒரு மோதிரம் இருந்தது! - “என்ன மோதிரமா?" ஆமாப்பா அதை ஐம்பது ரூபாய்க்கு அடகு வச்சி வாங்கி வாங்கிட்டு இந்தப் பக்கம் தான் போனான். அதோ வர்ரானே அவன்தான். கணக்கப்பிள்ளை எதிர்புறமாக த்