பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் " * 21 சுட்டிக்காட்டிய திசையைப் பார்த்தான் ராமன். ஆமாம்! அவன் மகன் குகன், வேகமாக வந்து கொண்டிருந்தான். அவன் கையில் மருந்து பாட்டிலும், மருந்து பொட்டலமும் இருந்தன. வெகு வேகமாக அவன் வந்து கொண்டிருந்தான். கணக்கப்பிள்ளை ரொம்ப நன்றி. நீங்க போங்க... - . கணக்கப்பிள்ளை ஒதுங்கிக் கொண்டார். மகனைப் பார்த்துராமன் மலைத்துப் போய் நின்றாலும், குகன் அதிக அன்புடன் "அப்பா' என்று அழைத்தான். - - 'வாடா பையா! விடுதியில் இருந்து எப்போ வந்தே? என்ன கையில்' என்று விசாரித்தான் ராமன். - 'உல்லாச பயணம் போகணும்னு பணம் கேட்டாங்க. நான் வாங்கிட்டு வர் ரேன்னு வீட்டுக்கு வந்தேன். வந்தா, அம்மா படுத்த படுக்கையா இருந்தாங்க. என்னை யாருன்னு கூட அடையாளந் தெரியாம திரு திருன்னு விழிச் சாங்க பயந்துகிட்டு ஓடிப்போய், டாக்டரைக் கூப்பிட்டேன். நல்ல டாக்டர். என் கூடவே வந்து அம்மாவை பரிசோதித்துப்