பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 4O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வாய்க்கு வந்தபடி தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருந்தான். தெய்வமே துணை என்று தெய்வத்தின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, சிவசாமி என்றாவது ஒரு நாள் திருந்தி, திரும்ப வருவான் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கடமையைச் செய்து வந்தனர். - ஒருநாள் காலையில், தூங்கி எழுந்து வந்த சிவசாமி கடன்காரன் ஒருவன் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். பல நாள் அவனை ஏமாற்றித் தப்பித்துக் கொண்ட சிவசாமி, இன்று வசமாக சிக்கிக் கொண்டான். உடனே வட்டிப் பணமும் தொகையும் தராவிடில் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து, அவனது சொத்தை ஏலம் விட ஏற்பாடு செய்து விடுவதாகக் கத்த ஆரம்பித்தான். ஏற்கனவே சிவசாமி தன் வீட்டில் உள்ள பண்ட பாத்திரங்களைக் கூட அடகுக் கடையில் வைத்திருந்தான். அதுவும் பற்றாமல் போகவே, வட்டிக்கும் பணம் வாங்கி யிருந்தான். அந்த வட்டிக்காரன் தான் இவன். முரட்டுப் பேர்வழி.