பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் 65 சில காரியங்களைச் செய்தான். கால்பந்தாட்டக் குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள் அனைவரையும், முதலில் தன் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என்பது முதல் திட்டம். பிறகு, அவர்களை வைத்தே உடற்கல்வி ஆசிரியரிடம் கூறி, தன்னைக் குழுத் தலைவனாக ஆக்கச் செய்ய வேண்டும். அதற்குள், மூர்த்திக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்து விட வேண்டும். - இந்தத் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு, இளங்கோ எல்லோரிடமும் பழக ஆரம்பித்தான். . இளங்கோ தலைக் கனம் உள்ளவன். கர்வம் பிடித்தவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், அவன் பழக ஆரம்பித்தவுடன், எல்லோரும் இவன் பின்னே சுற்ற ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அவ்வப்போது, ஒட்டலில் 'டி.பன் வாங்கிக் கொடுத்தும் வந்தான். இளங்கோவைப் போல கெட்டிக்காரன் கால் பந்தாட்டத்தில் யாருமில்லை என்று அவர்கள் பேசிக் கொள்ளும் படி செய்துவிட்டான். அதுமட்டுமல்ல. மூர்த்தியைப் பற்றி