பக்கம்:பதினாறும் பெறுக.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

16

பரம: புதுசா ? ஊம் . இப்பவெல்லாம் எவண்டா பழைய மாதிரி கதை எழுதறான் பழைய மாதிரி பாடறான் ? பழைய மாதிரி நடிக்கிறான் ?

முத்தன் : ஒங்களுக்கு எப்பவும் பழசுதான் பெரிசு புது நாடகத்திலே தம்பியோட காதல் நடிப்பு பிரமாதமா இருக்கும்னு சொல் றாங்க எசமான் ?

பரம : காதல் நடிப்பா ? யாருகிட்டேடா காதல் ?

முத்தன் : காதலன் யாருகிட்டே காதல் பண்ணுவான் ? காதலிகிட்டேதான் பண்ணுவான்.

பரம: பண்ணித் தொலைக்கட்டும்டா யார்டா அந்தக் காதலி ?அதையல்ல கேக்கறேன்.

முத்தன்: பாடகி மகள் தாழம்பூ, காதலி ;மிராசுதார் மகன் இளங்கோகாதலன். நடிப்பு! நடிப்பா அது ?

பரம: பின்னே உண்மையா ?

முத்தன் : வாழ்க்கையிலே உண்மை மேடையிலே நடிப்பு ! காதலோட லட்சணமே அது தானுங்களே !

பரம: டேய் ! டேய் ! என்னடா இது அக்கிரமம் ?

முத்தன்: காதலுக்குப் பேரு அக்கிரமம்னா நீங்க செய்யற காரியத்துக்கு என்ன பேரு வைக்கிறதாம் ?

பரம: அடே அதை ஏண்டா இழுக்கிறே இங்கே? செல்வரங்கத்துக்கு இது தெரிஞ்சா நல்லா இருக்குமா ? (செல்வரங்கம் வருகிறார்)

செல்வ: எது ? எது ? எனக்கு எது தெரியனும் ? எது தெரியக் கூடாதுன்னு சொல்றீங்க பரமசிவம் ?

பரம : வாங்க! வாங்க! ஒண்னுமில்லிங்க ஐயா! கல்லூரி ஆண்டு அழைப்பு வந்தது. அங்கே தம்பி இளங்கோ நடிக்கிற நாடகம் ஒண்ணு நடக்குதுங்க. அதைப்பத்தி பேசினோம். உங்க நினைவு வந்ததுங்க!

செல்வ: என்னோட நினைவா? அதுதான் முக்கியம் பரமசிவம் ! நெனைவு வரணும். நேத்துப் பாருங்க, என்னோட ஏழாவது மகள் சண்பகத்தோட கல்யாணத்தைப் பத்திப் பேசினோம். இளங்கோவைப் பத்திய நெனைவுதான் வந்தது. நம்மைப் போல பையனுக்கும் அந்த நினைவு வரணுமே.

முத்தன்: நெனைவு வந்திடிச்சிங்க எசமான்.

செல்வ: (ஆர்வத்தோடு) அப்படியா ? சண்பகத்தைக் கல்யாணம் பண் ணிக்கிறேன்னு சொல்லிட்டானா இளங்கோ ?

முத்தன்:இல்லீங்க!

செல்வ: என்னடா இல்லீங்க ?

முத்தன்: பொதுவிலே கல்யாணம்-மபண்ணிக்கிற நினைவுதானுங்க வந்திருக்கிறது. எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டாங்க ?