பக்கம்:பதினாறும் பெறுக.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

17

செல்வ: அதை நான் கண்டுபிடிக்கிறேன் பரமசிவம் கல்லூரி நாடகத்துக்குப் போவோமா ?

பரம : ஐயா ! அதுக்குத்தான் யோசனை பண்ணினேன்.

செல்வ: அதுக்கென்ன யோசனை நம்ப இளங்கோவோட நாடகத்தை நாம் பார்க்க வேணும் ?

முத்தன்: பெரியவங்க பார்க்கிற நாடகம், ஒரு நல்லதங்கா, அல்லி - ஆர்ச்சுனன், பக்த குசேலர், அரிச்சந்திர மயான காண்டம்னு இருந்தா நல்லா சுவைக்க முடியுமுங்க !

செல்வ: டாய் ! அதிகப் பிரசங்கி நிறுத்தடா மயான காண்டத்தை மட்டுமல்ல ; காதல் காண்டத்தையும் சுவைக்கவும் ஒடம்பிலே திராணி இருக்குதுடா இருக்குது சும்மா ஒதறாதே !

முத்தன் : மன்னிக்கனும் எசமான் ! ஒங்களுக்கு வயசு ஆயிட்டுதுன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்.

செல்வ: ஆமா..திருச்சிக்கா. பரமசிவம், பொறப்படுவோமா ?

பரம: தோ வந்துட்டேன்;போகலாமுங்க !

(உள்ளே போகிறார். பணம் எடுக்கிறார் செல்வரங்கம்)

செல்வ: முத்தா ! என்னோட மகளை இந்த வீட்டு மருமகளாகப் பண்றது ஒன்னாலேதான் முடியணும் இந்தா இதை வச்சுக்கோ (கொடுக்கிறார்)

முத்தன்:அதுக்கு ஏனுங்க பணம் ? நான் என்ன கருமாவா ? இருமாவா ? நீங்க பெரியவங்க. இப்படியெல்லாம் சின் னகைப் பண்ணப்படாதுங்க ? (மறுக்கிறான்)

செல்வ: சே ! இப்ப பெரியவங்க யாருன்னு எனக்கே புரியலியே.

முத்தன்: காலப்போக்கிலே எல்லாம் தெரிஞ்சுப் போவுது, வாங்க எசமான் !

(போகிறான்)

காட்சி 8

இடம்: விழா மேடை

காலம் : மாலை

(செல்வரங்கம், பரமசிவம், முத்தன் மற்றும் சிலர் இருக்கின்றனர்.

கல்லூரித் தலைவர். பேசுகிறார்)

கல். தலைவர் : பெரியோர்களே! தாய்மார்களே! மாணவர்களே! மாணவி களே! நமது கல்லூரியின் இருபதாவது ஆண்டு விழா வினைச் சிறப்புற வைப்பது நுண் கலைப்பகுதியாகும், நுண் கலைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க இசை நாடகம் இந்தப் பதினாறும் பெறுக பூக்கடைக்கு விளம்பரம் தேவை யில்லை. நாடகம் தொடங்குகிறது. சுவையுங்கள்.

(மேடையில் ஒருபுறமாக எல்லோரும் உட்கார திரை விலகுகிறது. பாடியவண்னம் உற்சாகத்தோடு குதி, கொண்டு மேடைக்கு வருகின்றனர் தலைவியும் தலைவனும்)