பக்கம்:பதினாறும் பெறுக.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

29

முத்தன் : உங்களோட மகன் உங்களோட நிபந்தனைக்கு ஒத்துக்கணும். எந்த நிபந்தனையை மத்தவங்களுக்குப் போடறீங்களோ, அந்தக் கொள்கைப்படி நீங்களும் நடந்துக்கணும், எசமான் !

பரம : நான் என்னடா தவறி நடந்து போட்டேன் ?

முத்தன்: அந்தத் தவறு மாலதியைக் கேட்டால்ல தெரியும் ?

பரம : (திடுக்கிட்டு, சினந்து) ஆ அயோக்கியப்பயலே ! என்னடா, என்னடா சொன்னே? என்னை பயமுறுத்தவா பாக்கறே? போடா வெளியே :

முத்தன் : எசமான்!. . . . . . வந்துங்க . . . . . . போயிடுவேன். . . . . . ஆனா) . . . .

பரம : பேசாதே. அதைப்பற்றி வாயைத் திறக்கிறதானா நீ இங்கே நிக்கவே கூடாது.

முத்தன்: தோ! வாயை மூடிக்கிட்டேன்.

(கையால் வாயை மூடிக்கொள்கிறான்)

இளங் : முத்தனை ஏனப்பா இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?

பரம : நான் கண்ணுங்கருத்துமா வளர்த்த அன்பு மகன். என்னோட ஆசையை மதிக்கலே, இந்த மடையனாவது என்னோட என்னோட நிலையைப் புரிஞ்சுக்க வேணாம் தடிக்கு மிஞ்சின மொடா வாகறானே

இளங் : (வருந்தி) அப்பா எனது நிலைமையைச் சற்று எண்ணிப் பாருங்கள். நான் தாழம்பூவை மணந்து வாழ்வதை கமலவேணியும் தடுக்கவில்லை. நீங்களும் மறுக்கவில்லை. மகப்பேறு வந்துதான் குறுக்கே நிற்கிறது.

பரம : எப்படி?

இளங் : மூன்றுக்குமேல் பெறக்கூடாது என்பது கமலவேணியம்மாள் போட்டிருக்கும் நிபந்தனை. பதினாறு பெறவேண்டும் என்பது உங்கள் நிபந்தனை !

பரம : ஒ அந்தம்மா இப்படியொரு நிபந்தனை போட்டிருக்காங்களா? அப்படியானா அது நடக்காது. நீ தாழம்பூவை மறந்திட்டு சண்பகப்பூவை தேடிக்க வேண்டியதுதான் !

இளங் : அது என்னால் முடியாத காரியம்மப்பா.

பரம : இது என்னால் முடியாது காரியமப்பா.

இளங் : மெய்யாகவா ?

பரம : இதிலே பொய்வேறயா? முடியாதுடா தம்பி. இந்தக் கல்யாணம் நிச்சயமா முடியாது. (நின்று வருந்தி, நிலைகுலைந்து செல்கிறான் இளங்கோ)

முத்தன் : எசமான். சண்பகப்பூவைப் பத்தி சொன்னீங்களே ! அது வேணாம் எசமான். -

பரம : ஏண்டா வேணாம் ?

முத்தன்: அது கசங்கின பூவுங்க எசமான் நேத்துத்தான் அந்த ரகசியம் எனக்குத் தெரிஞ்சுது.

பரம : (வியந்து) சண்பகம் கசங்கிய பூவா? எப்படி ?