பக்கம்:பதினாறும் பெறுக.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40



பரம : கல்யாணம் பண்ணிக்கிறவன் சம்மதிக்க வேணுங்களே !

செல்வ: பெத்த பிள்ளையைச் சம்மதிக்க வைக்கிறது தகப்பனோட கடமையல்லவா ?

பரம : அதே சமயத்திலே, கல்யாணத்துக்காக பலாத்காரத்தைப் பிரயோகம் பண்றதும், மடமையாச்சுங்களே !

செல்வ: பரமசிவம் ! நான் பிடிவாதக்காரன். ஒனக்குத் தெரியும். எப்படியும் என் எண்ணம் நிறைவேறியே தீரணும், என் மகளை உன் மகன் கல்யாணம் பண்ணிக்கலேன்னா ஒன்னோட சாயம் வெளுத்துப் போகும், ஒங்குடும்பத்தோட அந்தரங்க ரகசியமெல்லாம் வெளிப்படுத்தி, உன்னை முச்சந்தியிலே நிறுத்துவேன், மானபங்கப்படுத்துவேன். காரித் துப்புவாங்க ஊராரு.

பரம: (அஞ்சி) என்ன ? எங்குடும்பத்தோட அந்தரங்க ரகசியமா ? எதைச் சொல்றீங்க? அப்படி எங்கிட்டே எதுவுமே கிடையாது!

செல்வ : எல்லாம் எனக்குத் தெரியும்ப்பா ? நான் கடன் வாங்காத பணக்காரன்னு பகட்டுப் பேசினே; எங்கிட்டே பத்தாயிரம் கடன் பட்டிருக்கிறே ஒழுக்கத்திலே உயர்ந்தவன் தியாகின்னு பீத்திக்கிடடே ரகசியத்திலே வைப்பாட்டியை வச்சுப் பிள்ளைகளைப் பெத்திருக்கிறே இதெல்லாம் வெளியே தெரிஞ்சா, ஒன்னோட கவுரவம் என்ன ஆகும் ? நெனச்சுப் பாத்தியா ?

பரம : (அஞ்சி) ஆங் இது பயங்கரமான நடவடிக்கை ! ஐயா ! செல்வரங்கம் ! நான் மானத்துக்கும் மரியாதைக்கும் பயப்படறவன், தயவு செய்து என்னோட இந்தத் தவறுகளை வெளிப்படுத்தி மானபங்கம் செய்யாதீங்க. இதைச் செய்தா வது ஒம்மோட மகளை வாழவைக்கணும்னு நெனைக்காதீங்க! அது பெருங்குற்றமையா! கொடுமை ஐயா! வேணாம்.

செல்வ : ஐயா! பரமசிவம் ! குற்றமோ கொடுமையோ; எனக்குத் தெரியாது. என்னோட எண்ணம் நிறைவேறலேன்னா, அதுக்காக நான் எதையும் செய்யப் பின்வாங்கமாட்டேன்! ஜாக்கிரதை.

பரம : ஐயா ! இளங்கோவுக்கு உங்கள் மகளை பிடிக்கலே. நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். அதுக்காக என்னை அவமானப் படுத்திடாதீங்க. என் கவுரவத்தை தொலைச்சிடாதீங்க ஒங்க காலை வேணாலும் கட்டிக்கறேன். தயவு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க. என்னை மன்னிச்சிடுங்க செல்வரங்கம் ! (செல்வரங்கத்தின் காலில் விழுகிறார். "அப்பா! அப்பா !” என்று கூவிய வண்ணம் இளங்கோ வருகிறான். அவன் பின்னால் கமலவேணி, தாழம்பூ, மாலதி, சிறுவன் சுந்தரம் ஆகியோர் வருகின்றனர்.)

செல்வ : முடியாது! மானத்தோட வாழனுமானா கல்யாணத்தை நடத்தி வையி, மானம் மரியாதை கெட்டு மந்தையிலே நிக்கணுமானா மறுத்துப் பேசு.

பரம : ஐஐயோ ! என்னைச் சித் திரவதைச் செய்யாதீங்கய்யா ! நான் ஊராருக்கு பயந்து பொழைக்கிறவனய்யா! ஐயா !

இளங் : அப்பா! இதுவென்ன அலங்கோலம் ? ஒரு வஞ்சக நரியின் காலில் நீங்கள் எதற்காக விழ வேண்டும்? அப்படியென்ன நேர்ந்துவிட்டது உங்களுக்கு? என்ன குற்றம் செய்தீர்கள்?