பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பதினெண் புராணங்கள் பத்ம புராணத்தின் முடிவுரையை அதனைத் தொடங்கிய உரோமஹர்ஷனரே எடுத்துச் சொல்கிறார். பத்ம புராணத்தின் ஒரு பாடலைப் படித்தால் அல்லது கேட்டால் ஒருநாள் செய்த பாவம் விலகும். ஒரு அத்தியாயத்தைப் படிக்கவோ, சொல்லவோ கேட்டால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். புராணம் முழுவதையும் படிக்கவோ, கேட்கவோ செய்தால் ஒர் அசுவமேத யாகம் செய்த பயன் கிட்டும் என்று உரோமஹர்ஷனர் கூறியவுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர்கள் மிகவும் திருப்தி அடைந்து தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர்.