பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிகம்

ஆராத் திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன்தேவி ஈன்றமகன், முனை பனிப்பப் பிறந்து, பல்புகழ் வளர்த்து, ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின் பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை நிலைச்செருவி ற்ைறலை அறுத்து, அவன் பொன்படு வாகை முழுமுதல் தடிந்து குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் செருப்பல செய்து, செங்களம் வேட்டுத் துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றிக்

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக், காப்பியாற்றுக் காப்பியனர் பாடினர் பத்துப்பாட்டு, அவைதாம் கமழ்குரல் துழாய், கழையமல் கழனி, வரம்பில் வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடு பறந்தலை, வாள்மயங்கு கடுந்தார், வலம்படுவென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன்பணை நாடுகாண் அவிர் சுடர், இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில் : நாற்பது நூருயிரம் பொன்.

ஒருங்கு கொடுத்துத், தான்் ஆள்வதில் பாகம் கொடுத்தான்் அக்கோ.

ಹ6rುಹTು ಹಹಕಕTಾಗಿ நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்்.

10