பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழங்க மட்டும் கற்றிருந்தால், இந்நேரம் இப்பெருங்கோயில், வெறுங்கோயிலாக மாறிவிட்டிருக்கும், ஆனால், பொருளை வழங்கும் முறையைக்காட்டிலும், அப்பொருளைப் பெறும் வழியைப், பெருகத் தெரிந்துள்ளான். மாநிதிப் பெருக்கம் மண்டிக்கிடக்கும் மாற்ருர்களைப், பணிகொள்வதினலேயே தான்் பொருள்மிகு பெருவாழ்வில் வ | ழ லா ம் , வருவார் அனைவர்க்கும் வழங்கலாம்; ஆகவே, மாற்ருரைப் பணி. கொள்ளும் அப்பணியை, அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும்; அதற்கேற்ற பெருவலியுடையவளுகத், தன்னையும், தன் படையையும் ஆக்கிக்கொள்ளுதல் வேண்டும் என்ற, உண்மையை உணர்ந்து, அம்முறையை விடாது மேற்கொண்டுள்ளான்; ஆகவே, அவன்பால் அப்பெருவலி பொருந்தி யிருக்கும்வரை, இப்பெருவாழ்விற்கு அழிவில்லை; இதுதான்் உண்மை' எனறு கூறக்கேட்ட புலவர்க்குப், புதிய கவலை ஒன்று புகுந்து கொண்டது.

களங்காய்க்கண்ணியானின் செல்வவாழ்வு, அவன்பால் பொருந்தியிருக்கும் பெ ரு வ லி ைய யே அடிப்படையாகக் கொண்டுளது ஆதலின், அப்பெருவலி குறைந்தால், அது குறைந்து போகும்; ஆனால், ஒருவர் பெற்றிருக்கும் உடல் உரம், அழியா நிலையுடையதல்லவே, ஆண்டு ஏறஏற, அது குறைந்து போகுமே; களங்காய்க்கண்ணியானின் வாழ்நாளில் பெரும்பகுதி இப்போதே கழிந்து விட்டதே: இந்நிலையில் அவன் ஆற்றல், எத்துணை நாட்களுக்கு அழியாதிருக்கும்; விரைவில் அழியத் தொடங்கிவிடுமே அது; அது அழிந்து விட்டால், இவ்விழுநிதி இல்லாகி விடுமே; எமக்குப் பொருள் வழங்கும் அவ்வள்ளியோன் வாழ்வில் வளம்குறைந்து போயின், எம்வாழ்வும் இருண்டுவிடுமே; அந்தோ! அந்நிலை வந்துவிடுமோ! என்ற எண்ணங்கள் எழவே, புலவர் உள்ளம் பெரிதும் நடுங்கி விட்டது; அந்நடுக்கத்தைக் கண்ட அப்

49