பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு பெறும் வகையில், அவர்மீது பேரன்பு சொரிந்து, நல்ல இல்லறத் தலைவனாய் இனிது வாழ்ந்தான்்.

ஒரு பெரிய நாட்டையும், அந்நாட்டைக் காத்து நிற்கும் ஒரு பெரிய நாற்படையும் பணிகொண்டு பாணர், முதலாயி. ளுேர்க்குப் பெரிய துணைவனுய் வாழ வேண்டி பெரிய பொறுப்புடையவனுகிய தான்், அப்பெரும் பணியைப் பழுதறப் செய்து முடிக்கவல்ல, உடல் உரமும் உடையகுதல் வேண்டும். தன்பால் அவ்வுரம் இல்லையேல், தன்கீழ்ப் பணி புரியும் நாற்படைத் தலைவர் தன் ஏவல் கேளார்; ஆகவே, அப்படைத் தலைவரைக் காட்டிலும் சிறந்த உரம் உடையளுதல் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, மற்போர் முதலாம் உடற்பயிற்சிகளை நாள்தோறும் மேற்கொண்டு உடல்உரத்தைப் பெருக்கி, ஆண்சிங்கம் போலும் ஆண்மையுடையணுய் விளங்கினுன், பெருகியிருக்கும் உடல்உரத்தைப் பயன் இன்றிக் கழிய விடுதல் பெரும்பழியாம் ஆதாலாலும், போர்ப்புண் பெருவாழ்க்கை பயனில் வாழ்க்கையாம் ஆதலாலும், அவ்வுடலுரத்தைப் பயன்கொண்டு போர்க்களம் புகுந்து தான்ே போராடி, மார்பிலும் முகத்திலும் புண்பல ஏற்றுப் புகழ் பெற்ருன். இவ்வாறு அனைத்து வகையாலும் சிறந்து விளங்கினமையால் அவன்பால் வசைநீங்க இசைபெருகுவதாயிற்று.

இசைபட வாழும் ஒருவன்பால், இன்பம்தரும் பொருள் கள் எண்ணற்றன வந்து குவிதல் உலகியற்கையாம்; பிறரால் பெறற்கரிய பேரின்பப்பொருள்கள் தன்பால் எளிதாக வந்து சேரும் அந்நிலையில், இப்பொருள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகை இன்பத்தைத் தருவனவாம்; ஆகவே அவற்றைத் தனித் தனியே நுகர்ந்து பேரின்பம் அடைவேகை என்று எண்ணும் பேராசை உள்ளம் வந்து புகுந்து விடுவது, மனித இயற்கை

64