பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஞ்சின முன்ப நார்முடிச் சேரல்! நீ பிறர்க்கென வாழ்தியாகன்மாறு, போர்நிழல் புகன்று நின்மறங்கூறு குழாத்தர் எமக்கு இல் என்னுர் எனக் கொண்டு கூட்டுக.

உரை: துப்புத்துறைபோகிய = போர் மு. ைற க ளே முற்றக் கற்றுத் தேர்ந்தவரும். வெப்புடைத்தும்பை = தும்பை அணிந்து செய்யும் கொடிய போரில் வல்லவருமாகிய கறுத்த = உன்னோடு சினம் கொண்டு எழுந்த பகைவர் = உன் பகைவர். கடிமு ைஅலற = போர் முனையகத்தே கேட்டு நடுங்குமாறு. எடுத்து எறிந்து இரங்கும் - முரசடிக்கும் குறுந்தடியை ஒச்சி அடித்தலால் பேரொலி எழுப்பும். ஏவல்வியன் பண = தன் முழக்கொலி கேட்கும் தன்படை மறவரைப் போர்க்களம் நோக்கிப் போகத் துரண்டும் பெரிய முரசம். உரும் என அதிர்பட்டு முழங்கி = இடிபோல அதிர்ந்து முழங்க. செருமிக்கு = போர்வேட்கை மிகுந்து. அடங்கார் ஆரரண்வாடச் செல்லும் = அடங்காத பகைவரின் பற்றற் கரிய அரண் பாழாகும் வண்ணம் போர் மேற்செல்லும். காலன்அனைய கடுஞ்கின முன்ப = காலன்போலும் கடுஞ் சினரும் மிகுவலியும் உடையோனே! பொறித்தபோலும் புள்ளி எருத்தின் = பொறித்து ைவ த் த | ற் போலும் புள்ளிகள் நிறைந்த கழுத்தும் புன்புறப் புறவின் = புல்லிய முதுகும் உடையவாகிய புருக்களின். கனநிறை அலற = பெருங்கூட்டம், தம்மை வளைத்துப் பிடிக்க வேடர் விரித்து வைத்திருக்கும் வலையோ என்று எண்ணி அலறும் வகையில். அலந்தல வேலத்து உ ல வை அஞ்சினை - முறிந்த தலையை உடைய வேலமரத்தின் உலர்ந்த கிளை. களில். வாலிதின் நூலின் இழையா = வெண்மையான பருத்தி நூலால் இழைக்கப் படாமல். நுண் மயிர் இழைய= நுண்ணிய மயிர் போன்ற மெல்லிய இழையை உடைய. சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் சிலந்தி தன்வாய்'

72