பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரும்பிலுைம், சிலபல காரணங்களால், அவ் வரிசை வழிச் செல்ல இயலாமல் போய்விட்டது; இப்போது, அவ்வரிசையுள் நான்காவதாக நிற்பதும், 'ஒத்த பதிற்றுப் பத்து' என்ற பாட்டினைப் பெற்றிருப்பதுமாகிய பதிற்றுப் பத்தின் விளக்கத்தினை அளிக்க எண்ணினேன்; ஒவ்வொரு தொகுப்பிலும் பத்துப் பத்துப் பாக்களைக்கொண்ட, பதிற்றுப் பத்தில், முதல் தொகுப்பும், பத்தாம் தொகுப்பும் கிடைத்தில; ஆகவே எஞ்சியுள்ள எட்டு தொகுப்புகளின் விளக்கங்களையே அளிக்க முடிந்தது. அ வ் வ ா று அளிக்கும் நிலையில், ஒவ்வொரு பத்திலும் உள்ள, பத்துப் பத்துப் பாக்களையும் பயின்று, ஒவ்வொரு பாவிலும், அப்பாவிற்குப் பெருமை சேர்க்கும் சிறுதொடரை, அப்பாட்டின் தலைப்பாகக் கொடுத்து பெருமை செய்துள்ளார்கள் நம் பண்டைத் தமிழ்ச்சான்ருேர்,

அவ்வாறு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்களில், ஒவ்வொரு பத்தின் விளக்கத்திற்கு, அப்பத்தின் முதற் பாட்டிற்குச் சூட்டியிருக்கும் பெயரையே, அப்பத்துப் பாட்டின் விளக்கத்திற்குப் பெயர் சூட்டும் முறையினைப் பின்பற்றி, இம் மூன்றாம் பத்தின் விளக்கத்திற்குச் கமழ் குரல் துழாய்” என்ற பெயரைச் சூட்டியுள்ளேன். என் முன்னைய படைப்பு களுக்குத், தமிழகத்துப் பெரியார்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும் இவ்வரிசைக்கும் வழங்கி, மேலும் தமிழ்ப்பணி ஆற்றும் துடிப்புணர்ச்சி, என் உள்ளத்தில் மீண்டும் துளிர்விடத், துணை நிற்க வேண்டுகின்றேன்.

கா. கோவிந்தன்