பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பத்து 97

இனியவரைப் பிரிந்து வாழ்தலின்றிக் கூடியேயிருக்கின்ற நிலையினராகுமாறு, நீதான் நின் ஆட்சித்தொழிலைச் செய்து வருகின்றன. ஆதலிளுலே, நின் நாடு மிக்க திருவினை உண்ட தாயிருப்பது, பெருமானே! 聯

சொற்பொருளும் விளக்கமும் : விடு நிலம் - மேய்ச்சலுக்கு விடப்பெற்ற ஊர்ப பொதுநிலம். கரம்பு - வேறு எதுவும் விளையாத தரிசு நிலம். விடர் அளை - வெடிப்பின் வாய். கோடை - கோடைக்காலம். குன்றம் - மலைப்பகுதி. புல் லெனல் - பொலிவழிதல். வறற்காலை - வறட்சிக்காலம். கரைநிவந்து - கரையளவுக்கு உயர்ந்து. நனந்தலை . அகன்ற இடம். பேரியாறு; ஆற்றின் பெயர். சீர் - சிறப்பு: இது ஆற்றுப் பாய்ச்சலுள்ள பகுதியிலே அமைதலால். வியன் புலம் - அகன்ற வயற்பகுதிகள். வாய் - வாய்க்கால்; இடம். மிகீஇயர் - மிக்கதாக உவலை தழை. உருத்து - சினந்து. செந்நீர் - சிவப்பான புது வெள்ளம். பூசல் - ஆரவாரம். வெம்மை - கொடுமை. அகன்றலை - பரந்த இடத்தைக் கொண்ட நாடு; குட்டுவனது நாட்டுப்பகுதி. தமிழகத்தின் பிற பகுதிகளிற் கோடைக் காலம் நீடித்து வருத்துகின்ற ஆணியும் ஆடியுமாகிய மாதங்களில், சேரநாட்டுப் பக்கத்தே தென்மேற்குப் பருவக்காற்ருல் பெருமழை பெய்யும்; இதனையே நயமாகக் கூறுகின்றனர். நீர்வளத்தால் உண்டா கும் பேராரவாரத்தை யல்லாமல், நீரற்று வெம்மையால் வாடித் துன்புறும் நிலையற்ற, வளநாடு என்று கொள்க.

திரு - செல்வம்; இயற்கை செயற்கை வளங்கள். விறல் - வல்லமை; வீறுடைமை. புணர் நிரை - தொடர்ந்து செல் லும்வரிசை. துமிய துண்டுபட்டு அழிய. உரம் - வலி துரந்து - செலுத்தி. கறை - குருதிக்கறை கழல் - வீரக்கழல். கடு - விரைவுடைய. மா - ப்ெரிய. மறவர் - போர்மறவர். கதழ்வு. விரைவு. தொடை - அம்புதொடுத் தெய்யும் செயல். இளை தந்து - காத்து. முட்டுறல் - குறைபாடுஉண்டாதல். புலம்பா உறையுள் - பிரிவற்றுத் தங்கியிருத்தல். தம் அம்புகளாலே பகைவரது களிற்றுப்படை நிறையை அழிக்கும் திறனுடைய பெருமறவர் எல்லாரும், நீதான் நின் நாட்ட்ை இனிதாகக் காத்தலினலே, தம் அம்புசெலுத்தும் தொழிலேயே மறந்தா ராயினர் என்பதாம். காட்டாற்றுப் புதுவெள்ளம் தழைகளை யும் தன் மேற்கொண்டு மிகுவிரைவோடு வருதலின்,'உவலை சூடி உருத்துவரு மலிர்நிறை என்றனர்.

7 سه لt