பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பதிற்றுப்பத்து தெளிவுரை

104 பதிற்றுப்பத்து தெளிவுரை

குழ்ந்த மணற்கோட்டைகளை வெள்ளம் கரைத்துப் போது ஆவ் வெள்ளத்தை ஆரவாரத்தோடு தடுக்கும் முயற்சியின் போது எழுகின்ற விருப்பங்கொண்ட கூட்டத்தின் ஆரவாரத் தோடு, முழவொலியின் முழக்கமும் சேர்ந்து எழுகின்ற, மூதூர்க்கண் எடுக்கப்பெறும் விழவினைக் காண்பதன் பொருட்டாகச் செல்லும் மக்களின் ஆரவாரமும் பொருந்திய செழுமையான ஊர்கள் பலவற்றைக் கொண்ட மருதநிலப் பகுதியும்

குறிஞ்சி நிலவளம்:

தினைக்கொல்லையை உழுகின்ற உழவர்கள், தம் குடிசை மேல் போடப்பெற்றிருக்கும் வரகின் வைக்கோல் மேலாக இட்ட மணமிக்க காட்டு மல்லிகைக் கொடிகளைப் பொருந் தியதும், வன்னிலத்தைச் சேர்ந்த குடியிருப்பை உடையது மான குடியிருப்பை உடையவர்கள். அவர்கள், மெல்லிய தினையின் மாவினைத் தமக்குள் முறை முறையே பகுத்துக் கொள்வர். இத்தகைய மலை சூழ்ந்த புன்புலத்தைக் கொண்டவான மலைநாட்டு ஊர்களும்

முல்லை நிலவளம்:

பலவகைப் பூக்க்ளும் உதிர்ந்து வாடிக் கிடக்கின்ற காடானது, தான் பயன் தருதலினின்றும் மாறிப்போனதாக, செவ்வரக்கைப் போல விளங்கும் நுண்மண்லைத் தன்பாற் குன்றுகளைப் போல மேடிடும்படியாகக் கொண்டதாக, ஒள்ளிய நுதலையுடையவரான இளமகளிர் கழற்சிக்காயோடு திரிந்து கொண்டிருக்கும், வான்ளாவும் உயர்ந்து வளர்ந்த மரங்களையுடைய காடுகள் பொருந்திய முல்லை நிலத்து ஊர் களும், பிற நிலத்து ஊர்களும்

முரசுகள் பொருந்தியவரான முடியுடை வேந்தர்களும், பதினெண் குடியினரான வேளிர்குலத் தலைவர்களும், நின் ஆணையாகிய அவ்வொன்றனையே தாமும் சொல்லியவராக, நினக்கு அடங்கியோராக விளங்குவர். கடலிடத்தும், காட்டிடத்தும் அரண்ங்களைப் பெற்றுள்ளோர் என்னும் வலி மையாளர்களும், நின் பேரைக் கேட்ட மாத்திரத்தானே நடுங்குவர். வலிமைமிக்க நினது வெற்றி முரசத்தினது கடுமையான முழக்கமானது வானத்தளவுக்கும் அடைந்த தாய் எப்புறமும் எதிரொலி செய்யும். கடுமையான சினம் தோன்றுமாறு முழங்கும். மந்திரத்து அரிய இறலயுடைய