10
பதிற்றுப்பத்து தெளிவுரை
கள்: மர்ரே கம்பெனியார் தனி நூலாக இதனை வெளியிட் டார்கள்.
இவ்வாறு வெளிவந்துள்ள பல பதிப்புக்களாலும் இதன் செழுமையையும் சீர்மையையும் தமிழன்பர்கள் அறிந்து இன்புறலாயினர். தெளிவுரையமைப்பு ஒன்றும் வெளிவரின் அது தமிழன்பர்களிடையே மிகவும் பரவி, அதனால் தமிழ்நலம் பெருகும் என்னும் ஆர்வத்துண்டுதலாலேயே இப் பதிப்பினை யான் விரும்பி அமைத்துள்ளேன்.
தெளிவுரையும், அருஞ்சொற் பொருளும், இன்றியமையாத சில விளக்கக் குறிப்புக்களும் கொண்ட கையடக்கமான ஒரு பதிப்பாக இப் பதிற்றுப்பத்துத் தெளிவுரை நூல் வெளி வருகின்றது.
இதனைத் தங்கள் வெளியீடாக ஏற்று வெளியிட்டுள்ள பாரி நிலையத்தினரின் ஒத்துழைப்புக்கும் தமிழன்புக்கும் யான் மிகப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். ‘பைந்தமிழ் புரக்கும் பாரி’ என்று போற்றப்பெறும் அவர்களின் பெரும்பணியிற் பங்குபெறும் இந் நல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்கும் பெரிதும் மகிழ்கின்றேன்.
இதனை மிகவும் விரைவாகவும் அழகாகவும் அச்சியற்றித் தந்த மாருதி அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியதாகும்.
தமிழார்வம் மிகுந்த தமிழன்பர்களிடையே இத் தெளிவுரைப் பதிப்பும் என் பிற எட்டுத் தொகை நூல்களின் பதிப்புக்களைப் போலவே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகின்றேன்.
புலியூர்க் கேசிகன்