பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பதிற்றுப்பத்து தெளிவுரை.

துறை தென்னெல்லையாக, இவற்றுக்கு இடைப்பட்ட நாடு களிலுள்ள அரசர்களது போர்முரசம் முழங்குதலையுடைய பெரும் போர்கள் பலவும் கெட்டழியவும், அவர்களை நீ வென்றதேைல உண்டாகிய ஆர்ப்பொலி எழவும், சொல்லப் படுதற் கேற்ற புகழுடைய அப் பலவரசரின் நாடுகளது தொன்மையான அழகனத்தையும் அழித்த, போராடு தலையே தொழிலாகவுடைய படைஞரையும், பொன் மாலை யினையும் உடையவனை குட்டுவனே!

காட்டிடத்கேயுள்ள பெரிய மூங்கில்களும் வாடி உலர்ந்து போமாறு, பெரும் பெயலானது பெய்யாமற் பொய்த்தது: அதஞலே அன்றிடமெல்லாம் பசுமையற்று வெம்மை அடைந் தன; ஞாயிற்றது சினத்தி எப்புறமும் விளங்கியது; அருவிகள் நீரற்றவையாய் இல்லையாயின; இத்தகைய பெரிய வற்கடக் காலத்தும், கடத்தற்கரிய நீர்ச்செலவை உடையதாயிருப்பது நினக்குரிய பேரியாறு. அதுதான் தன் இருபாலுமுள்ள பெரிய கரைகளை உடைத்துக் கொண்டு செல்லுமாறும், புதிய ஏரைப் பூட்டும் நின் நாட்டு உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடிக் கொள்ளுமாறும், நிறைந்த முழக்கையுடைய மேகங்கள், எல்லையற்றபடி மின்னியதிர்கின்ற் இடிமுழக்கைச் செய்து, பெய்தலை மிகுதியாகத் தொடங்கி, மழைநீரைப் பொழியும். அதனைப் போல

நின்னையடையும் இரவலர்கள் ஒம்பாது நிரம்ப உண்டு மகிழுமாறு பெருஞ்சோறு வழங்கியும்; இன்பச்சுவை தரும் பாணரும் கூத்தரும் முதலாயினேர்ச்கு நல்ல அணிகலன் களைப் பரிசிலாக வழங்கியும்; ஆடுகின்ற சிறையையுடைய கின்னரிப் பறவையின் இசையையும் வென்ற நர்ம்பின் இசை யோடு பொருந்த இனிய குரலாற் பாடும் விறலியர் பல் பிடி யானைகளைப் பரிசிலாகப் பெறுக என்று வழங்கியும்; மேலே துய்யினக் கொண்ட பூக்சளியுடைய வான்கப்பூவும், நுண் கொடியாகிய உழிஞையின் பூவும் கலந்து சூடுகின்ற, வெற்றி பெறுதலிலே கொண்ட் விருப்பும், பகைவர்க்கு அச்சத்தைத் தருகின்ற வலிமைச் சிறப்பும், பகைப்புலத்தே சென்று கொள்ளையிடலையு முடைய வீரர்கள், கொல்லும் களிறுகளைப் பெறுவாராக என்று வழங்கியும்; கணுக்களையுடைய நுண் கோலைக் கைக்கொண்டு, ஊர் மன்றத்தேயிருந்து, பாடற் குரிய தலைவனின் புகழ்களைத் தெரிந்து, தெருக்களின் இரு மருங்கும் அவற்றைப் பாடிச்சென்றபடி களம் வாழ்த்தும் அகவலன் குதிரைகளைப் பெறுக என்று வழங்கியும், நீதான்