பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

161

ஐந்தாம் பத்து 161

தெளிவுரை : பொன்ற்ை செய்யப்பெற்ற அழகான தும்பைப் பூவையும், பொறிகளோடு கூடிய அம்பருத் தூணி யிடத்தே, புற்றுள் அடங்கியிருக்கும் பாம்புகளைப்போல ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளைந்த வில்லையும், அஞ்சி ஒடுங்காத மனஎழுச்சியையும், களிறுகளை எறிதலாலே முனை முறிந்த வடுப்பட்ட வேலையும் உடையவர் நின் சிறந்தமறவர் கள். அவர்கள் நெருங்கிச் செய்கின்ற அகன்ற போர்க் களத்தை நினக்கே உரியதாகக் கொண்டு வெற்றி பெற்றன. பகையரசர் எழுவரது முடிப்பொன்ற்ை செய்யப்பெற்ற ஆரத்தை மார்பிடத்தே அணிந்துள்ள சேரமாளுகிய செங் குட்டுவனே!

ஆழமான அகழிகளையுடைய மதில்கள் பலவற்றைக் கைப்பற்றி வென்று, அவற்றின் உட்புகுந்து, அங்குள்ள வற்றை அழித்த, நாடாட்சிக்கு உரியதாக அமைந்த அகன்ற உள்ளிடத்தையுடைய அவ்வரண்களின் கதவுகள்க் காக்கும் கணையமரத்தைப்போல உறுதியுடன் விளங்கும். பகைவர் நாடுகளைக் கைப்பற்றும் திண்மையான தோள்க்ளை உயரத் துக்கி வீசிப் பிணங்கள் குவிந்து கிடக்கின்ற போர்க் களத்திலே, முன்னம் பல காலங்களிலும் துணங்கைக் கூத்

னே ஆடியும்

அரசனுக்குரிய சோறு வேறென்னது அனைவருக்கும் ஒன்ருகவே சமைத்த, ஊன்குழையச் சமைத்துள்ள ஊன் சோற்றைப் பகைவர்க்கு அஞ்சிப் புறமுதுகிடாத வீரர்க்கு அவருள்ளம் விரும்புமாறு பெருவிருந்தாக அளித்தும்

பகைவரது படைவரவைத் தடுக்கும் பொருட்டாக முள் வேலி இடுதலை அறியாத எல்லைப்புறத்தையும், பகைவரது விற்களிலே தொடுத்தெய்யப்படும் விசையமைந்த அம்பு களைத் தடுக்கும் வலிய வெண்மையான கேடகத்தையும், அவற்றுக்கேற்ப அமைந்த மறப்பண்பால் மிகுந்த தான்ையை யும் உடையவரான மன்னருள்ளே, i. 影

மேகங்கள் முகந்து கொள்ளலாற் குறையாமலும், ஆற்றுநீர் மிகுதியாகப் பாய்தலாலே கரைகடவாமலும், குறுக்கிடும் காற்றுத் திரட்டும் அலைகளாலே எழுதலையுடைய கருமையும் நிறைசூலுமுடைய மேகங்களைப்போல முழக்க 'மிடும் அலைகளோடும் கூடிய குளிர்ச்சியமைந்த கடலிடத்தே, விளக்கமுடைய செம்மணிபோலும் ஒளியினைக் கொண்ட வ்ேற்படையைச் செலுத்தி, அக்கட்லிட்த்திருந்த பகைவரை

س-ده لسا