பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 80 பதிற்றுப்பத்து தெளிவுரை

வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின் அடும்பமல் அடைகரை அலவன் ஆடிய வடுவடு நுண்ணயிர் ஊதை உஞற்றும் தூவிரும் போங்தைப் பொழிலணிப் பொலிதந்து இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் } 0

வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப் பெருமலை வயின்வயின் விலங்கும் அருமனி அரவழங்கும் பெரும்தெய்வத்து வளைஞரலும் பனிப்பெளவத்துக் குணகுட கடலோடு ஆயிடை மணந்த 15

பந்தர் அந்தரம் வேய்ந்து வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல் ானையுறு கறவின் நாடுடன் கமழச் சுடர்நுதல் மடநோக்கின்

வாள்ககை இலங்கெயிற்று 20

அமிழ்துபொதி துவர்வாய் அசைாடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் வெள்வேல் அண்ண்ல் மெல்லியன் போன்மென உள்ளுவர் கொல்லோ கின் உணரா தோரே? மழைதவழும் பெருங்குன்றத்துச் 25

செயிருடைய அரவெறிந்து

கடுஞ்சினத்த மிடல்தபுக்கும பெருஞ்சினப்புயல் ஏறுஅனையை தாங்குநர், தடக்கையானைத் தொடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்கின் படைவழி வாழ்கர் 30

மறங்கெழு போங்தை வெண்தோடு புனைந்து கிறம்பெயர் கண்ணிப் பருந்துாறு அளப்பத் தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை கைவல் இளையர் கையலை அழுங்க மாற்றருஞ் சீற்றித்து மாயிருங் கூற்றம் 35