பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பதிற்றுப்பத்து தெளிவுரை

திரிந்தவாய்ச் சென்று கொண்டிருந்தன. கருமை நிறத்தை மேற்கொண்டுஎழுதலையுடைய மிகப்பெரிய பலவான கேடகங் களுடன், வேலும் வாளும் ஏந்திக் கொண்டவராக, முன்ன னிப் போரிலே ஈடுபட விரும்பி எழுந்தாரான வன்கண்மை யுடைய படைமறவர்கள், தம் மெய்யை மூடும் கவசங்களைப் பற்றி நினையாதவராக, அவையின்றிய்ே பகைப்படையணி

களை ஊடறுத்துச் சென்றனர். நோலாமைக்கு ஏதுவாகிய

அவர்களது தும்பை மாலைகள், பகைப் படையணிகளின்

இடையிடைய்ே விளங்கித் தோன்றின. அதனல் வீழ்ந்து பட்ட பகை மறவர் பலரும், உயர்நிலை உலகத்தை அடைந் தனர். இவ்வாறு அறநெறியோடு பொருந்திய நற்போரைச் செய்து மேம்பட்டவன் நீ. "இடியினும் மாறுபட்டதான நின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பெரிய கை யானது, இரப்போர்க்கு ஈதலின் பொருட்டாக மட்டுமே கவியும்; அன்றிப் பிறரை இரத்தற் பொருட்டாக என்றும் மலர்தலை அறியாதது என்று, சான்ருேர் உரைக்கக் கேட்டுள் ளேம், பெருமானே!

இனியே,

ஒளிர்கின்ற கால்விளக்கின் செல்வம் விளங்கும் ஒளி யிலே, முழக்கிற்கு ஏற்பத் துணங்கைக் கூத்து ஆடுகின்ற மகளிர்க்குக் கைகோத்தாடும் புணையாக, சிலைத்தலையுடைய வலிய கொல்லேற்றைப் போவத் தலைக்கை தருதலையும் செய்வாய். நீ தான் அம் மகளிரோடு செறிந்து ஆடிவரு வோனுயினே! அசைகின்ற கோதையினையும், பரந்த அழகுத் தேமல் புள்ளிகளையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய இருண்ட கண்களையும், பெரிய இயல்பினையும் உடையாளான நின் தேவியானவள், நின் துணங்கையாட்டத்தைக் கண்டு நின்பால் ஊடல்கொண்டனள். ஒள்ளிய இதழ்விரிந்த தாமரைப் பூவைப் போன்ற தன் சிற்றடிகளிலே அணிந் துள்ள பல மணிகளைக் கொண்ட இரு சதங்கைகளும், தன் சிறுபரடுகளே வருத்துமாறு கால்கள் நடுங்கக், கரையழிக்கும் நீர்ப்பெருக்கிலே பட்டு வருந்தும் தளிரைப்போல நடுங்கிய வளாக நின்றபடி, நின்னை எறிதற்காகப் சிறிய செங்குவளை மலரினை ஒச்சினுள். அதனைக் கண்ட நீதான், அதனைத் தருக என்றபடி நின் கைகளை விரித்தாயாய் இரந்து நின்றன. அந்த நின் செயலாலும், அவள் தன் சினங் குறையாதாளா யினள். அம் மலரை நினக்குத் தராதவளாக, நீதான் எமக்கு எவ்வுறவினை உடையையோ?" என்று சொல்லிவிட்டு