பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390. பதிற்றுப்பத்து pேdqர்ை

பூனனிந்து எழிலிய வனைந்துவரல் இளமுலை மாண்வரி யல்குல் மலர்ந்த நோக்கின் வேய்புரைபு எழிலிய விளங்கிறைப் பனைத்தோள் காமர் கடவுளும் ஆளும் கற்பின் சேறுை கறுதுதல் சேயிழை கணவ 1 O

பானர் புரவல! பரிசிலர் வெறுக்கை பூனனிந்து விளங்கிய புகழ்சால் மார்ப! நின் நாள்மகிழ் இருக்கை இனிதுகன் டிகுமே! தீல்தொடை நரம்பின் பாலை வல்லோன் பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச் 15 சேறுசெய் மாரியின் அளிக்கும் கின் காறுபடு திருவின் கனைமகி ழானே!

தெளிவுரை : போர்க்களத்திலே வெட்டுண்டு கிடக்கும் பிாங்களின்மேலே கால் இடறியதஞ்ல் சிவந்த குருதிக் கறை படிந்த குளம்பினையும், விரையச்செல்லும் செலவினையு முடைய நல்ல குதிரைக்கு, விரிந்த தலையாட்டத்தைச்சூட்டி, தம்மோடுவந்து பொருதிய பகைவரின் வீரங்கெட்டழியுமாறு வென்றவரும், யாக்கை நிலையாமையை எப்போதும் தம் முடைய நெஞ்சிலே நீங்காமற் கொண்டிருப்பவருமான ப்ோர் வீரர்களின் தலைவனே! விற்படையாளருக்குக் கவசம் போன்றவனே! நின்னைச் சேர்ந்தோருக்கு நீயே பெறற்கரிய பெருஞ் செல்வமாக விளங்குபவனே! -

பூண்கள் அணியப்பெற்று விளங்குவனவும், முல்க் கோலம் தீட்டப்பெற்றவுமான, புடைத்து வருதலையுடைய 驚 மார்பகங்களையும், மாட்சியான ரேகைகள் பாருந்திய அல்குல் தடத்தையும், மலர்ச்சி பெற்று விளங்கும் கண்களையும், மூங்கிலைப்போன்று அழகுபெற்று விளங்கும் விளக்கம் பொருந்திய மூட்டுக்களை உடையலு மாகிய பணத்த தோள்கள்ையும், விரும்பத்தக்க அருந்ததி யையும் ஆட்சிசெய்யும் கற்பினையும், நெடுந்தொலைவுக்கும் மணம் வீசுகின்ற நறிய நுதலையும் கொண்டவளான, செம் பொன் அணிகளைப் பூண்டுள்ள அரசமாதேவியின் கணவனே!

பாடிவரும் பானர்களைப் பேணிப் பாதுகாப்போளே! வத்திரக்கும் பரிசிலர்க்கு அவரது செல்வமாகவே விளங்கு