பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எட்டாம் பத்து

249


71. குறுந்தாள் ஞாயில்!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. சொல்லியது : பெருஞ்சேரலின் வென்றிச் சிறப்புக் கூறி, அவனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தது.

[பெயர் விளக்கம் : கோட்டை மதிலின் அடியிடங்களைப் பார்க்க, அவற்றில் குறுகிக் குறுகியிருக்கும் படியையுடைய ஞாயில் என்றதனால் 'குறுந்தாள் ஞாயில்' என்றனர் இவ்வாறு கூறின சாதிப் பண்பாலும் படியைத் தாளென்று ஆதினபடியாலும், இதற்குக் 'குறுந்தாள் ஞாயில்' எனப் பெயர் தந்தனர்.]

அறாஅ யாணர் அகன்கண் செறுவின்
அருவி யாம்பல் நெய்தலொடு அரித்துச்
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பகடு உதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண அளவை உறைகுவித் தாங்குக்

5

கடுந்தேறு உறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாரின்
அலந்தனர் பெரும நின் உடற்றி யோரே!
ஊரெரி கவர உருத்தெழுந்து உரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப

10

மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம்பழி ஊக்குநர்
குண்டுகண் அகழிய குறுந்தாள் ஞாயில்
ஆரெயில் தோட்டி வெளவினை ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் இளையர் அங்கை விடுப்ப

15

மத்துக்கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப்
பதிபா மாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றென அருஞ்சமத்து அருநிலை தாங்கிய புகர்நுதல்

20