பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

299



ஈங்குக் காண்கு வந்தனென் யானே
உறுகால் எடுத்த ஓங்குவரல் புணரி 40
நுண்மணல் அடைகரை உடைதரும்
தண்கடல் படப்பை நாடுகிழ வோயே!

தெளிவுரை : இவ்வையகமானது நானிலப் பகுதியாக அமைந்து வளம்பெற்ற காலத்திருந்தே, அரசுத் தொழிலில் முறைமை நீங்காது ஆண்டு வந்தவர் நின் முன்னோர். விந்தை யென்னும் கடவுளுடைய பெயரைக் கொண்டதான விந்தாடவி என்னும் காட்டுப்பகுதியோடு கூடியதாக விந்திய மலையும் உயர்ந்து நிற்கின்றது. தெளிந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்டு உள்ளது அகன்ற இடத்தையுடைய இவ்வுலகம்.

இதன்கண்ணே, தம் புகழ் பரவப்பெற்ற பகைவரின் தேயத்தும் சென்று, அவர்க்குரிய அசையும் பெருங்கடலினது பெருமை கெடுமாறு வேற்படையைச் செலுத்தினன் ஒருவன். தெய்வத்தன்மையுடைய கடம்பாகிய பகைவரது காவன் மரத்தை வேரோடும் வெட்டி வீழ்த்தினான் ஒருவன். போரிடுதற்கான முரண்பாட்டை அடைந்தவனாகிய கழுவுள் என்பானைப் புறங்கொடுத்துத் தோற்றோடச் செய்தான் ஒருவன். அஞ்சத்தக்க வலிகொண்ட பகைமன்னர்களை எல்லாம் அவர் வெட்டுண்டு வீழ அழித்து வெற்றிபெற்றான் ஒருவன். காற்றினும் கடிதாகச் செல்லுதற்கு வல்லவராகிய யாதவரைத் தோற்றோடுமாறு செய்தான் ஒருவன். ஒளி சுடரும் பூக்களைக் கொண்ட வாகையினைக் காவன்மரமாக உடையவனாகிய நன்னனைக் கொன்றான் ஒருவன்! பகைவரது குருதியைத் தூவிக்கலந்த குருதிச் சோற்றுக் குன்றத்தோடு அஞ்சத்தக்க முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள துர்க்கைக்குப் படையலிட்டுப் போற்றினான் ஒருவன். பிற வேந்தர்களும் வேளிர்களும் தமக்குப் பணிந்து பின்னிற்குமாறு இவ்வாறு வெற்றிப் புகழினை அடைந்தவர் நின் முன்னோரான நின் குலத்துப் பேரரசர்கள்.

அவர்கள் வழிவந்தவனே! விரிந்த பிடரி மயிரைக் கொண்ட ஆண்சிங்கத்தினது மறத்தன்மையைப் பொருந்திய தலைவனே!

ஒன்றோடொன்று விரவியபடி பலவகையான முரசங்களும் முழங்குவதும், வரிசையாக அமைந்த கேடகத்தைத்