பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 பதிற்றுப்பத்து தெளிவுரை

பும், சிறந்த ஆன்மிக ஞானமும், உயரிய ஒழுக்கச் செவ்வியும் வாய்க்கப் ப்ெற்றவராகவும், உண்மைக்கிளத் தெளிவுபடக் கூறும் சொல்லாட்சி படைத்தவராகவும் விளங்குகின்றனர்.

'சொற்பெயர் நாட்டம் கேள்வி தெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி, அவை துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கை யானர் இவர் ஆகலாம். இவர் கடவுள் ரம்பிக்கையிலும், யாக வேள்விகள் இயற்றிக் கடவுளரை மகிழ்வித்துப் போற்றுவதிலும் நம்பிக்கை உடைய்வர். ஆரிய மரபினரான சான்ருேருள் தமிழ் கற்றுச் சிறந்தவருள் இவரும் ஒருவர்.

'இனனே, காமம், கழி கண்ணுேட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்பு மிக உடைமை, தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து ஆறந்தெறி திகிரிக்கு வழியடையாகும் என்று தமிழரது அரசியல்நெறி யாதெனக் காட்டுபவரும்

፫•

வாழ்வு எப்ப்டி அமையவேண்டும்? பிறர் பிறர் ரலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விழின் நடந்து, தம் அமர்துணேப் பிரியாது, பாத்துண்டு, மூத்த யாக்கையொடு, பிணியின்று கழிய என்று வாழ்வின் நல்லமைதியை வகுயிரக்காட்டுபவர் இவர். -

'ஓதல், வுேட்டல், அவை பிறர்ச் செய்றம், ஈதல், ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரி யர்த9ர் வழிமொழிந் தொழுகி, ஞாலம் நின்வழி யொழுக' எனப் பாடும் இவ்ர், அந்தக் கோட்பாட்டைத் தமிழரசர் ஏற்று நடக்கவேண்டும் எனவும் விருப்பம் கொள்ளுகின்றனர். *

இவ்வாறு அறநெறியே நிரம்பிய உளத்தவர் இவராதலி குலே, போரால் நாட்டின்கண் உண்டாடும் அழிபாடுகளே எல்லாம், கற்பார் நெஞ்சம் கரைந்தருளுமாறு எடுத்துக் காட்டி,நிலைய்ாமையை உணர்த்தி, த்ெரிப்ற வாழ்த்க்லம் மிக வலியுறுத்துகின்றனர். * *

ஐந்திணைச் சால்புகளையும் அழகுறக் காட்டும் இவரது “இணர்ததை ஞாழல்' என்னும் செய்யுள் சற்றுக் கற்று

ன்புறுதற்கு உரிய ஒரு சிறந்த செய்யுளாகும். . மந்திரத்து அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்' என்று, கடவுள் அழிபாட்டை முன்னின்று நடத்திய தொழிலி னரையும் இவர் செய்புள் காட்டுகின்றது.